Close your eyes and Listen to this until you get inner Peace and mukthi.
Best song ever which beautifully described lord shiva.
Sung by : Unnikrishanan Thank you.
Lyrics:
ஹர ஹர சிவ சிவ ஓம்..ஓம்..ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்
ஹர ஹர சிவ சிவ..சிவ சிவ ஹர ஹர
ஹர ஹர சிவ சிவ ஓம்...ஓம்..ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்
அருனையின் பெருமகனே
எங்கள் அண்ணாமலை சிவனே
ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2)
அருள்வாய் ஈஸ்வரனே ...
அன்பே அருணாச்சல சிவனே
ஹர ஹர சிவ சிவ ஓம்
அபயம் அபயம் அண்ணாமலையே
ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்..ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்
கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே
மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2
மலையென எழுந்தவனே
எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர
ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே
பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2
அணிவாய் அவசியமே!
எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்
போற்றிய பரமேசா!
அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2
அணிந்திரு அரவிந்தமே
எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
அண்டம் இருந்திட கண்டம் கருத்திட
நஞ்சினை சுவைதவனே!
அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2
அதை நீ அருந்திடுமே
எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்
தினம் செல்லும் குருமணியே
ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2
ஏறிட மனதில்லையோ!
எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா!
எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2
நேரம் உம்மக்கில்லையோ!
சொல்வாய் அருணாச்சல சிவமே(ஹர ஹர
சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே!
அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2
ஆடிடுவாய் உடனே!
எங்கள் அருணாச்சல சிவனே !(ஹர ஹர
பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே
உன் திரு வாசலில் 1000 கங்கையை (2
கண்களில் ஊரிடுமே !
அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர
மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே
தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2
நியாயமோ ஈஸ்வரனே ?
ஏற்பாய் அருணாச்சல சிவனே!(ஹர ஹர
சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்
அறிவாய் அமரேசா!
உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2
வரமதை உடன் தருமே
எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
அய்யா!அழைத்திடுக
சிவமே! சிவமே!தருவாய் நலமே!
அபயம் தா அரனே!
எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர
Comments
Post a Comment